tamilnadu

img

நெல்லையில் வாலிபர் சங்கத் தலைவர் அசோக் படுகொலை போலீஸ் அலட்சியம்; சாதி வெறியர்கள் அட்டூழியம்

திருநெல்வேலி, ஜுன் 13- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட பொருளாளர் எம்.அசோக், சாதி  வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை  செய்யப்பட்டார். காவல்துறையின் மெத்தனப் போக்கால் நடந்துள்ள இந்த படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் அசோக்கின் உடலை  வாங்க மறுத்து அவரது உறவினர்களும் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் ஊழியர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அருகே கரையிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்  (24). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  நெல்லை மாவட்ட பொருளாளராகவும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழு உறுப்பின ராகவும் செயல்பட்டு வந்தார். கரையிருப்பு ஆர்எஸ்ஏ நகரில் தாய், தந்தை 2 சகோதரர்கள் ஆகியோருடன் வசித்து வந்தார். பிஎஸ்சி படித்துள்ள அசோக், வறிய நிலையில் உள்ள தனது குடும்பத்துக்கு உதவியாக தனியார் டயர்  கம்பெனியில் பணியாற்றி வந்தார். அதே நேரத்தில், மக்களை பாதிக்கும் பல்வேறு பிரச்சனை களில் அவர்களுடன் இணைந்து போராட்டங் களும் நடத்தி வந்தார்.  கரையிருப்பு கிராமத்தில் உள்ள தலித் மக்கள் தங்களது வேலை மற்றும்அன்றாடப் பணி களுக்காக வேறு சமூக மக்கள் வசிக்கும் பொதுப் பாதை வழியாகவே செல்ல முடியும். அவ்வழியே செல்லும் தலித் மக்களை சாதி ஆணவம் கொண்ட  சில வெறியர்கள் சாதிய ரீதியாக இழிவுபடுத்தி வந்துள்ளனர். இதனை தட்டிக் கேட்பவர்களை இழிவுபடுத்துவதும் அச்சுறுத்துவதும் தாக்குவது மான சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளன.

வாலிபர் சங்கத்தின் இளம் தோழர் அசோக், சமூக அக்கறைமிக்கவர். கரையிருப்பு உள்ளிட்ட கிராமங்களின் அனைத்துப் பகுதி மக்களுக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால், சாதி ஆதிக்க வெறி சக்திகள்  திட்டமிட்டே படுகொலை செய்துள்ளனர். இப்பகுதியில் சாதி வெறிப் பிடித்த ஒரு கூட்டம் இதுபோன்ற தாக்குதலை தலித் மக்கள் மீது தொடர்ந்து நடத்துகின்றனர். பிரச்சனை வரும் நேரத்தில் காவல்துறை, சிலரை கைது செய்வதும், அதை கண்டுகொள்ளாமல் விடுவதும், இதனால் கொலை வழக்குகள் கூட தானாகவே காலாவதியாகி தள்ளுபடி ஆவதும் நடைமுறையாக இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்தின் உச்சத்திற்கு சென்றதன் விளைவுதான் அசோக் படுகொலை. காவல்துறையின் அலட்சியப் போக்குதான், அசோக்கை படுகொலை செய்யும் அளவிற்க சாதி வெறிக் குற்றவாளிகளுக்கு துணிச்சலைக் கொடுத்துள்ளது. தமிழக அரசும் காவல்துறையும் நினைத்தால் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்திருக்க முடியும். ஆனால் அதைச் செய்வதற்கு அரசு தயாராக இல்லை. தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாப்பதில் முதல்வருக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். 
சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து...

 

திருநெல்வேலியில் சாதி ஆதிக்க வெறியர்களால், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டதற்கு காவல்துறையின் அலட்சியமே  காரணம் என வாலிபர் சங்க  மாநிலக்குழு குற்றம்சாட்டியுள் ளது. இப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டனம் முழங்கவும் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ் குமார், செயலாளர் எஸ்.பாலா  ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளரும், நெல்லை தாலுகாச் செயலாளராகவும் செயல் பட்டு வந்த தோழர் அசோக் சாதி ஆதிக்க வெறியர்களால் 12-06-2019 அன்று இரவு கரையிருப்பு பகுதி யில் படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய கொடூரச் செயலை, சாதி ஆணவ வெறியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக் கடந்த பல ஆண்டு களாக நெல்லை தாலுகா பகுதி யில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக வும், சாதி மோதல்களை தடுத்து மக்கள் ஒற்றுமைக்காகவும் தொடர்ந்து களப்பணியாற்றி வந்தவர்.

காவல்துறை அலட்சியம்
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27 ம் தேதி வயல்வெளிக்கு சென்று விட்டு தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது வழிமறித்து பேச்சிராஜன் உட்பட சிலர் தோழர் அசோக்கை யும் அவரது தாயாரையும் தாக்கி யுள்ளனர். இதுகுறித்து தச்ச நல்லூர் காவல் நிலையத்தில் தோழர் அசோக் புகார் அளித்தார். அதன் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. அதே நேரத்தில் பாதிக்கப் பட்டவர்கள் மீது எதிர்தரப்பு புகார் அளித்ததையொட்டி இரு தரப்பி னர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்ன வெனில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டிய தோழர் அசோக்கின் புகாரை காவல் துறை அலட்சியப் போக்குடன் கையாண்டதே இத்த கைய படுகொலைக்குக் காரணம் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு கிறோம். தோழர் அசோக் மக்கள்  ஒற்றுமைக்காகவும் சமூகக் கொடு மைகளுக்கு எதிராகவும் போராடி வருவதை அந்தப் பகுதியைச் சேர்ந்த சாதி ஆதிக்கவாதிகளால் பொறுத்துக் கொள்ள இய லாமல் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக் கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒருவர் புகார் அளித்தால் அவ ருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க  வேண்டும், அந்த புகாரின் மீதான விசாரணையை விரைவில் நடத்திட வேண்டும் என ஏற்கனவே பல வழிகாட்டுதல்கள் இருந்தும் அத்தகைய வழிமுறைகள் எதை யும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பின்பற்றவில்லை. இதிலிருந்து சாதி ஆதிக்க வெறி யர்களுக்கு மாவட்ட காவல்துறை துணை போயிருக்கிறது என்பது வெட்கக்கேடானதாகும். எனவே தோழர் அசோக்கை படுகொலை செய்த குற்றவாளி களை விரைந்து கைது செய்வது டன் அவர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தரு வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலி யுறுத்துகிறோம்.
 

மண்டலம்
தொடர்ந்து கரையிருப்பு பகுதியில் சாதி ஆதிக்கவாதி களால் தீண்டாமை கொடுமை நிலவி வருவதால் இந்த பகுதி யை வன்கொடுமை பாதிக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் வதுடன் தீண்டாமை வன்கொடு மையை தடுத்திட மாநில அரசாங் கம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இந்த கொலை குறித்து சிபி சிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட தோழர் அசோக்கின் குடும்பத் திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், அவரது குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்திடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். தொடர்ந்து கரையிருப்பு பகுதி ஆர்.எஸ்.ஏ நகர் பொது மக்க ளுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பேருந்து நிலையம் செல்வது உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டிற்கு பாதை அமைத்துக் கொடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை பாது காப்பதற்குப் பதிலாக சாதி ஆதிக்க வெறியர்களுக்கு துணைபோகும் தச்சநல்லூர் காவல்துறை அதி காரிகள் மீது கடுமையான நட வடிக்கை எடுத்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தை நடத்திட அனைத்துப் பகுதி ஜனநாயக இயக்கங்களையும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தமிழ் நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
தோழர் அசோக் படு கொலைக்கு கடும் கண்டனம் தெரி வித்துள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர், “வாலிபர் சங்கத்தின் தலைவராக முழு வீரியத்தோடு தனது போரா ட்டப் பங்களிப்பை செலுத்தி வந்த தோழர் அசோக், தலித் மக்கள் குவியலாக வசிக்கக்கூடிய தங் களது பகுதியில் குடிநீர் விநியோ கம், சாக்கடை அடைப்பு, ரேசன் விநியோக முறைகேடுகள் போன்ற பல பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடு பட்டதும், அப்பகுதியில் அம்பேத் கர் விழாக்களை சிறப்புடன் ஏற்பாடு கள் செய்து கொண்டாடியதும் அவர் மீது சாதி ஆதிக்க சக்தி களுக்கு ஆத்திரமும், வன்மமும்  ஏற்பட காரணமாக இருந்துள் ளது; அத்தகைய சக்திகளின் அச்சுறுத்தலையும் மீறி அசோக் உறுதியுடன் செயல்பட்டு வந்துள் ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர். அசோக் படுகொலையை கண்டித்து கண்டனம் முழங்குமாறு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஊழியர்களை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

;