திருநெல்வேலி, ஜூலை 25- நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் உள்ள பாரதியார் சிலை அருகில் பாரதியார் ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட ஆட் டோக்கள் இயங்குகின்றன. இந்நிலையில் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் மின் மாற்றி அமைப்பதற்காக புதன்கிழமை காலை மின் வாரிய ஊழியர்கள், மாநக ராட்சி அதிகாரிகளும் வந்த னர். அவர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் கேட்ட போது இங்கே ட்ரான்ஸ்பார்மர் வருகிறது என கூறிஅதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதையடுத்து சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், சிஐடியு ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட பொ துச்செயலாளர் ஆர்.முருகன் ஆகியோர் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக அங்கு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து அவர்களிடம் மின் வாரிய ஊழியர்கள், மாநக ராட்சி அதிகாரிகள் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ட்ரான்ஸ் பார்மர் ஸ்டாண்டிலிருந்து சற்று தள்ளி நடுவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது இதனைய டுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.