tamilnadu

img

6 மாதங்களுக்குப் பின் நெல்லை விரைவு ரயில் இயக்கம்...

திருநெல்வேலி:
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக பயணிகள், விரைவு ரயில் சேவைகள் முழுமையாகத் தொடங்கப்படாத நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதில் தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக திருச்சி- நாகா்கோவில் ரயில், கன்னியாகுமரி-சென்னை விரைவு ரயிலும் இயக்கப்படுகின்றன. 

இந்த ரயில்கள் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதால் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட பயணிகள் சென்னை செல்வதில் சிக்கல் ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. ஆகவே, நெல்லை விரைவு ரயிலை சிறப்பு ரயில்இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து நெல்லை விரைவு ரயில் சிறப்பு ரயிலாக வெள்ளியன்று முதல் இயக்கப்படும். பொதிகை, அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் சிறப்பு ரயில் களாகவே இயங்கும் என தெற்கு ரயில்வேநிர்வாகம் தெரிவித்தது. அதன்படி, திருநெல்வேலியில் இருந்து நெல்லை விரைவு ரயில் வெள்ளிக்கிழமை மாலை 7.45 மணி அளவில் புறப்பட்டது. 6 மாதங்களுக்குப் பின் இந்த ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் பயணம் செய்தனா். இந்த ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகளை கூடுதலாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.