திருநெல்வேலி, ஜூன் 2- நெல்லையில் இருந்து நாகர் கோவிலுக்கு சென்ற பஸ்சில் கண் டக்டர் கூடுதல் பயணிகளை கீழே இறங்க வலியுறுத்தியும் அவர்கள் இறங்காததால், வேறு வழியின்றி 80 பயணிகளுடன் பேருந்து புறப்பட்டு சென்றது. தமிழ்நாட்டில் 68 நாட்களுக்கு பிறகு சென்னை உள்பட 4 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்கலில் திங்கட்கிழமை பேருந்து போக்குவரத்து தொடங்கி யது.நெல்லை புதியபேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, சங்க ரன்கோவில், திருச்செந்தூர், கோவில் பட்டி உள்பட முக்கிய நகரங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. டவுண் பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட்டது.
திங்களன்று முதல்நாளில் அனைத்து பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் செவ்வாய்கிழமை அனைத்து பஸ்களிலும் பயணிகள் அதிகஅளவில் ஏற முற்பட்டனர். கண்டக்டர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, அடுத்த பஸ்சில் வருமாறு அறிவுறுத்தி 60 சதவிகித பயணி களை மட்டுமே ஏற்றிச் சென்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ் வாய்கிழமை தான் பேருந்து போக்கு வரத்து தொடங்கியது. நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல குறைந்த அளவு பேருந்துகளே இயக் கப்பட்டது. காலை 7 மணிக்கு ஒரு பேருந்து புறப்பட்டது. அதிலும் 60 சதவிகித பயணிகளை விட கூடுதலாகவே பயணிகள் இருந்தனர்.
அதன்பிறகு காலை 9 மணிக்கு அடுத்த பேருந்து இயக்கப்பட்டது. இத னால் நாகர்கோவில் செல்லும் பயணி கள் கூட்டம் அதிகரித்தது. 9 மணிக்கு புறப்பட்ட பஸ்சில் ஏராளமான பயணி கள் போட்டிபோட்டு ஏறினார்கள். இதனால் சமூக இடைவெளி காற் றில் பறந்தது. இதுபோக ஏராளமான பயணிகள் நின்று கொண்டும், வாசல்படியில் தொற்றிக்கொண்டும் பயணம் செய்தனர். கண்டக்டர் பய ணிகளை கீழே இறங்க வலியுறுத்தியும் அவர்கள் இறங்காததால், வேறு வழியின்றி 80 பயணிகளுடன் அந்த பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது. இதில் பல பயணிகள் முகக் கவசம் அணியாமலேயே புறப்பட்டு சென்றனர்.
திங்கட்கிழமை புறப்பட்ட பஸ் களில் பெரும்பாலான பயணிகளுக்கு வெப்ப பரிசோதனையும் நடத்தப்பட் டது. அனைவருக்கும் கை கழுவும் திரவமும் வழங்கப்பட்டது. ஆனால் செவ்வாய்கிழமை பயணிகள் கூட்டம் அதிகரித்ததால், எந்த பயணிகளுக் கும் வெப்ப பரிசோதனை நடத்தப்பட வில்லை. கை கழுவும் திரவமும் வழங்கப்படவில்லை. பஸ்கள் புறப்படும் இடத்தில் கை கழுவும் திரவம் வைக்கப்பட்டிருந்தது. ஒரு சில பயணிகளை அதில் கை களை கழுவி முறைப்படி பஸ்சில் ஏறி னார்கள். செவ்வாயன்று பயணிகள் எண் ணிக்கை அதிகரித்ததால் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட் டத்தில் உள்ள டெப்போக்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப் பட்டது.
நெல்லை பொருட்காட்சி திடல் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிராம புறங்களுக்கும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இன்றும் காய்கறி லாரி கள் ஏராளமாக வந்ததால் தொடர்ந்து போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சில நேரங்களில் பஸ்கள் வெளியே வர காலதாமதமும் ஆனது. சம்பவ இடத்திற்கு பஸ் நிலைய பாதுகாப்பு போலீசார் அவ்வப்போது சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.