திருநெல்வேலி, செப்.29- நெல்லையில் வயது வந்தோர் காது கேளாதவர் சங்கத்தின் 34 ஆவது ஆண்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் மேல முன்னீர் பள்ளத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூக ஆர்வலர் நிஜாம் தலைமை தாங்கி னார். சங்கத்தின் அறக்கட்டளை தலைவர் காந்தி, பொதுச்செய லாளர் அரசமுத்து ஆகியோர் வரவேற்று பேசினர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலை வர் தியாகராஜன், செயலாளர் குமாரசாமி, நிர்வாகிகள் செல்வ சுந்தரி, காசி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில் அனைவருக்கும் பசுமை வீடுகள் வழங்கவேண்டும் உதவித் தொகை மாதம் ரூ.1000 வழங்க வேண்டும், 80 சதவீதத்திற்கு மேல் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.1500 வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதவிர சங்க கட்டிடத்துக்கு மறைந்த தோழர் கணபதிக்கு பதிலாக காந்தி பெயரில் அரசுமுத்து மாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக மறைந்த நிர்வாகி கணபதியின் உருவப்படத் திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் ஜெபகுமார், காது கேளாதோருக்கான விளையாட்டு மேம்பாட்டு தலை வர் மூர்த்தி, நிர்வாகிகள் அய்யாசாமி தேவகுமார் சுந்தர ராஜன் மாரியப்பன் விஸ்வநாதன் ஆறுமுகம் உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.