tamilnadu

img

தூத்துக்குடியில் காவல் உதவி ஆய்வாளர் படுகொலை... 

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான ஏரல் பகுதி தாலுகா அந்தஸ்தில் உள்ளது. இந்த பகுதிக்கு அருகே உள்ள வாழவல்லான் நேற்று இரவு ஏரல் சரக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்பொழுது முருகவேல் என்ற நபர் தனது மினி வேனில் குடிபோதையுடன் வந்துள்ளார். இதனை கண்ட ஏரல் காவல் உதவி ஆய்வாளர் பாலு (56) முருகவேலை தடுத்து விசாரித்து எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.பணி முடிந்து நள்ளிரவு 2 மணிளவில் கொற்கை விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் பாலுவை வழிமறித்த முருகவேல் தனது நண்பர்களின் உதவியுடன் தான் வந்திருந்த மினி வேன் வண்டியை வைத்தே ஏற்றி கொலை செய்துள்ளார்.  
தப்பியோடிய முருகவேலை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.   

;