tamilnadu

img

தமிழகமே தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் போது

சிபிஎம் கண்டனம்

புதுக்கோட்டை, ஜூன்.24- தமிழகத்தின் அனைத்துப் பகுதி களும் தாகத்தால் தவித்துக் கொண்டி ருக்கும் போது மனிதாபிமானத்தோடு கேரள அரசு கொடுக்க முன்வரும் தண் ணீரை மறுப்பது கடும் கண்டனத்திற்குரி யது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் மாநி லக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையில் திங்கள்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகம் தொடர்ச்சியாக நீராதா ரத்தை இழந்து வறட்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டுவரை கோடை காலங்களில் விவசாயம் கடும் பாதிப்பை சந்திக்கும். கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். ஆங்காங்கே குநீருக்கான தட்டுப்பாடு இருக்கும். இதற்காக அங்கொன்றும், இங்கொன்றுமாக போராட்டம் நடக்கும்.   ஆனால், தமிழகம் முன்னெப்போ தும் இல்லா அளவுக்கு கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. மக்கள் அன்றாடம் குடிக்க, சமைக்க, குளிப்ப தற்கே தண்ணீர் கிடைக்காமல் அவதிப் பட்டுகின்றனர். தமிழகத்தின் பெரும் பகுதியான மாவட்டங்களில் இது தான் நிலைமை. சென்னை போன்ற பெருநகரங்களில் நிலைமை இன்னும் படுமோசமாக உள்ளது. தண்ணீர் இல்லாமல் பல்வேறு ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்கள் உள்ளிட்ட இன்னபிற நிறுவனங்களும் மூடப்பட்டு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். மெட்ரோ ரயில் நிலையத்தின் கழிப்பறைகள்கூட மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் நடத்தப்படாமல் உள் ளாட்சி நிர்வாகம் முடக்கப்பட்டள்ள தால் மக்கள் யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற் கின்றனர். எதைப் பற்றியும் கவலைப் படாமல் தங்களின் ஆட்சியின் நாட் களை எவ்வளவு தூரம் தள்ளிப்போட முடியும் என்கிற சிந்தனையிலேயே அமைச்சர் பெருமக்கள் மூடிக்கிடக் கின்றனர். குளிப்பதற்கும், துவைப்ப தற்கும் பயன்படுத்துவதாலேயே தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள தாக மாநிலத்தின் முதல்வரே அறிக்கை விடும் அவலத்தில்தான் ஆட்சி அதி காரம் இருக்கிறது.  இந்நிலையில், பக்கத்து மாநில மான கேரள அரசு நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்கள் மூலமாக அனுப்பி உதவுவதாக அறி வித்தது. 20 லட்சம் லிட்டர் தண்ணீர் என்பது ஒட்டுமொத்த மாநிலத்தின் குடி நீர்த் தேவையை போக்காது என்பது உண்மை. அதே நேரத்தில் 20 லட்சம் லிட்டர் என்பது பல லட்சம் குடும்பங்க ளில் தாகத்தை தீர்க்க உதவும். இத்த கைய அளப்பரிய உதவியை ஏன் தமி ழக அரசு மறுக்க வேண்டும்? கிடைக் கின்ற அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி மக்களின் தாகத்தைத் தீர்ப்பதே மக்கள் நல அரசின் கடமை யாக இருக்க முடியும். இதில் என்ன  வறட்டுக் கவுரவம் வேண்டி இருக்கி றது?

எனவே, தமிழக அரசு உடனடியாக கேளர அரசின் உதவியை ஏற்று தண் ணீரைப் பெறுவதற்கு முன்வர வேண்டும். மேலும், மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியைப் பெற்று போர்க்கால அடிப்படையில் தமிழ கத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சனை யைத் தீர்ப்பதற்கு அனைத்து வழி களையும் மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களின் கொந்த ளிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதை இந்த அரசு எதிர்கொள்வது மிக வும் சிரமமாக இருக்கும் என்பதை கட்சி யின் மாவட்டச் செயற்குழு தெரி வித்துக்கொள்கிறது.