tamilnadu

img

வி.பி.சிந்தன் நினைவு ஜோதிப் பயணம்

திருச்சிராப்பள்ளி, ஆக.17- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 16-வது மாநில மாநாட்டையொட்டி சென்னையில் இருந்து மாநில செயலாளர் ரவிக்குமார் மற்றும் துணை தலைவர் தயாளன் தலைமையில் எடுத்து வரப்பட்ட வி.பி.சிந்தன் நினைவு ஜோதி பயணத்திற்கு மத்திய அமைப்பின் மெட்ரோ கிளை சார்பில் வெள்ளியன்று திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் சிறப்பான வரவேற்பு அளிக்க ப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில துணைத்த லைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் இருதயராஜ், கோட்ட செயலாளர் நடராஜன், லால்குடி கோட்ட செயலாளர் பழனியாண்டி, ஸ்ரீரங்கம் கோட்ட செய லாளர் சுப்ரமணியன், ராதா கலந்து கொண்டனர்.   இதே போன்று மன்னார்புரம் மின்வாரிய அலுவலகம் முன் கோட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மணப்பாறையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைவர் அந்தோணி செயலாளர் ரியாசுதீன், துணை தலைவர் கண்ணன், சிஐடியு  ஒருங்கிணைப்பாளர் ஷாஜகான், ஆட்டோ ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நவமணி, சிபிஎம் வட்ட செயளார் ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

;