tamilnadu

திருச்சி முக்கிய செய்திகள்

ஜல்லிக்கட்டு காளைகளை `பதிவு செய்யலாம் 
திருச்சிராப்பள்ளி, டிச.21- திருச்சி மாவட்டத்தில் வரும் 2020 ஆண்டு நடைபெற விருக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ள காளைகள் பற்றிய விபரங்கள் மற்றும் அதன் உரிமையா ளர்கள் குறித்த விபரங்களை, டிச.28-க்குள் அந்தந்த பகுதி களில் உள்ள சம்பந்தப்பட்ட அரசு கால்நடை மருத்துவரை அணுகி பதிவு செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, டிச.21- ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணிப்பதற்காக மாநில தேர்தல் ஆணையத்தால் திருச்சி மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளராக இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்கு நர் எஸ்.கணேசை நியமித்துள்ளது. மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பார்வையாளரின் தொலைபேசி எண்ணில் 63816-83806 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரி விக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.