tamilnadu

திருச்சி, நாகை, திருவாரூர் முக்கிய செய்திகள்

ஊழல், லஞ்சம் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு 
திருச்சிராப்பள்ளி, நவ.1- ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. இதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் மாணவ– மாணவிக ளுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் கனரா வங்கி சார்பில் ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சியில் கனரா வங்கி முதுநிலை மேலாளர் ராஜேஸ் வரி உறுதிமொழியை வாசித்தார். அதனை வங்கி அதிகாரி கிருஷ்ணன், பள்ளி முதல்வர் விஜயஸ்ரீ, மாணவ– மாணவி கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
தரங்கம்பாடி, நவ.1- நாகை மாவட்டம், தரங் கம்பாடி வட்டத்தில் உள்ள கிராமங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை தடுக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கி மழைக் காலங்களில் கடை பிடிக்க வேண்டியவற்றை குறித்த விழிப்புணர்வு நிகழ் ச்சியையும் வெள்ளியன்று துவக்கினர்.  சங்கத்தின் வட்டத் தலை வர் வீ.எம்.சரவணன் தலை மையில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் வட்ட செய லாளர் கே.பி.மார்க்ஸ், பொரு ளாளர் சாமித்துரை, துணை செயலாளர் பவுல் சத்திய ராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகி கள் இப்பணியில் ஈடுபட்டு வருவதோடு தொடர்ந்து 3 தினங்கள் நிலவேம்பு கசாயம் வழங்க உள்ளனர்.

புதிய அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யலாம்
திருவாரூர், நவ.1-மாற்றுத்திறனாளிக ளுக்கு இதுவரை தேசிய அடையாள அட்டை திருவா ரூர் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக மத்திய அரசின் தனிப்பட்ட அடை யாள அட்டை (UDID Card - Uni‡ue Idebtity Card fHr PersHbs with Disaoility) மாற்றுத் திறனாளிகளின் ஆதாரமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் பகிர்ந்தளித்தல் அமைச்சகம் மூலம் தேசிய  அளவிலான புள்ளி விவரங்க ளை சேகரித்து மாற்றுத்திற னாளிகளுக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கிடுவதற்கு ஏதுவாக, திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், தங்களது பெயரை இவ்வலு வலகம் மூலம் இலவசமாக பதிவுகள் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இவ்வாய்ப்பினை இம்மாவட்டத்தினை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி
தரங்கம்பாடி,நவ.1-நாகை மாவட்டம், செம்ப னார்கோவிலில் அரசு சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன், செம்ப னார்கோவில், குத்தாலம், மயிலாடுதுறை, கொள்ளி டம், சீர்காழி ஆகிய ஒன்றி யங்களை சேர்ந்த 1657 பேருக்கு திருமண நிதியுதவி யையும், தாலிக்கு தங்கத்தை யும் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், கோட்டாட்சியர் கண்மணி, எம்.எல்.ஏக்கள் எஸ். பவுன்ராஜ், பி.வி.பாரதி, தரங் கம்பாடி வட்டாட்சியர் சித்ரா,  ஊராட்சி ஒன்றிய ஆணை யர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பல துறை அதி காரிகள் கலந்து கொண்ட னர்.