இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சிராப்பள்ளி, செப்,22- தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஹெலன் கெல்லர் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிறு அன்று திருவெறும்பூரில் நடைபெற்றது. முகாமிற்கு ஸ்ரீ ஸ்வீட் உரிமையாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். முகாமை திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். முகாமில் கண்புரை, கண் நீர் அழுத்த நோய், கிட்ட, தூரப் பார்வை, வெள்ளெழுத்து ஆகிய குறைபாடு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர்.
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
தரங்கம்பாடி செப்22- கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள மணலூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாதேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் திருவிடைக்கழி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்துள்ளார். சனியன்று மாலை கோவில் அருகேயுள்ள கடலாழி ஆற்றுப்பகுதியில் குளிக்க இறங்கிய மாதேஷ் நீரில் சிக்கி உயிரிழந்துள்ளார். பல மணி நேரம் தேடியும் உடல் கிடைக்காத நிலையில் ஞாயிறன்று காலை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பொறையார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கோவில் நிர்வாகம் முறையான அடிப்படை வசதிகளை செய்யாததே உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கோயில் விழா
தரங்கம்பாடி செப்22- நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், திருவிடைக்கழி முருகன் கோவிலில் புரட்டாசி மாத விழா வெள்ளி,சனி,ஞாயிறு மூன்று தினங்கள் நடைபெற்றது. சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு வீதியிலிருந்து தில்லை திருக்குராவடி பாத யாத்திரைக் குழுவினர் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலூர், பண்ரூட்டி, வடலூர்,சிதம்பரம்,நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நடைப்பயணமாக வந்து சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கியது. செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருண்,தியாகராஜன் ,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெனகர் மேற்பார்வையில் தெருவிளக்குகள், அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
அம்மா இரு சக்கர வாகனத்திற்கு விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, செப்.22- புதுக்கோட்டை மாவட்டத்தில்; 2,334 மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது. கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. வயது 18 முதல் 40 வயது வரை ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்குள். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். ஆதரவற்ற விதவை, மகளிரை குடும்பத் தலைவராக கொண்டவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருமணம் ஆகாத 35 வயதுக்கு மேற்பட்ட முதிர் கன்னிகள், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகள். அமைப்பு சார்ந்த, அமைப்பு சாராத, தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனம், சமுதாயம் சார்ந்த அமைப்புகள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர், சமுதாய சுகாதார பணியாளர் மற்றும் சுய தொழில் புரிவோர், ஒத்த தொழில் குழுவில் பணிபுரிந்து வாழ்வாதார செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுவோர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் 50 சதம் மானியம் அதிகபட்சம் ரூ.25,000 அரசும், மீதமுள்ள தொகையை பயனாளிகளும் செலுத்திக் கொள்ள வேண்டியது. மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் ரூ.31,250 வழங்கப்படும். விண்ணப்பம் பெறும் இடங்கள் பேரூராட்சிப் பகுதியெனில் பேரூராட்சி செயல் அலுவலரிடமும், நகராட்சி எனில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையரிடமும், மற்றும் ஊரகப் பகுதி எனில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அவர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் தொடர்புடைய அலுவலரிடம்; சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த நபர்களுக்கு அரசு விதி முறைகள் மற்றும் கள ஆய்வு அடிப்படையில் பயனாளிகள் இறுதி செய்யப்படுவார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள தகுதியான பெண்கள் முன்னோடி திட்டமான அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின்கீழ் பயன்பெற்று தங்கள் பயணத்தை எளிதாக்கி பணியினை, தொழிலை மேலும் சிறப்புடன் செய்ய வேண்டும்.
லாரி மோதியதில் மீன் வியாபாரி பலி
தூத்துக்குடி, செப்.22- ஈரோடு புதுமை காலனியைச் சேர்ந்தவர் முருகன் (50). மீன் வியாபாரியான இவர் வெள்ளியன்று தனது மினி லாரியில் தூத்துக்குடிக்கு சென்று மீன்களை மொத்தமாக வாங்கி னார். பின்னர் அவற்றை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு, சனி யன்று அதிகாலையில் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். அந்த மினிலாரியை ஈரோட்டைச் சேர்ந்த சதீஷ் (37) ஓட்டிச் சென்றார். மினி லாரியில் முருகன் மகன் பாலகணேஷ் (21), தொழிலாளர்களான ராஜன் (50), ராஜா மகன் கார்த்திக் (17), சாந்தி (55) ஆகியோரும் சென்றனர். அதிகாலை 4.30 மணி அளவில் எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் நாற்கரசாலை பாலம் அருகில் சென்றபோது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக மினி லாரி மோதியது. இதனால் நிலைதடுமாறிய மினி லாரி சாலையோர தடுப்பு கம்பியில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த முருகன் மற்றும் பாலகணேஷ், ராஜன், கார்த்திக் ஆகிய 4 பேரையும் சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் டிரை வர் சதீஷ், சாந்தி ஆகிய 2 பேரும் அதிர்ஷ்டவசமாக காய மின்றி உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில், எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.