tamilnadu

img

பேராசிரியர்களுக்கு பயிற்சிப் பட்டறை

மயிலாடுதுறை, ஜூன் 23- மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் ஐ.க்யூ.ஏசி சார்பில் பேராசிரியர்களுக்கு நவீன தகவல் தொடர்பு உபகரணங்கள் மற்றும் சாதனங்களை பயன்படுத்தி கற்பித்தலை மேம்படுத்த ஒரு நாள் பயிற்சி பணி பட்டறை சனிக்கிழமை நடந்தது. பணி பட்டறைக்கு செயலர் கே.கார்த்திகேயன் தலைமை வகித்து பேசினார். முதல்வர் ஆர்.நாகராஜன், டீன் டாக்டர் எஸ்.மயில்வாகணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணிதம் மற்றும் விலங்கியல் துறை பேராசிரியைகள் என்.மோகனா, ஏ.யமுனா, ஏ.சங்கரி பயிற்சியளித்தனர் சுமார் 170 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.