tamilnadu

img

எதிர்கால இந்தியா மீதான அக்கறை மாணவர்களுக்கு அதிகம் உள்ளது

தஞ்சாவூர், ஏப்.7-கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பினர் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினா்.தஞ்சாவூரில் அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, இந்திய மாணவர் சங்கம், திராவிடர் கழக மாணவர் அமைப்புஉள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவ அமைப்பினர் சார்பில் “எதிர்கால அரசியல்குறித்த” கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். நிகழ்ச்சியில் தஞ்சாவூர்மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கலந்து கொண்டார்.அப்போது மாணவ, மாணவிகள் எதிர்கால அரசியல் குறித்தும், மத்திய, மாநில கல்வி திட்டங்கள் குறித்தும், நீட்தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும்,மீத்தேன் திட்டம், அரசியல் கட்சிகளின் கொள்கைகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், அரசியல் கட்சியின் தேர்தல்அறிக்கை குறித்தும்  கேள்விகளை கேட்டனர். மாணவர்களின் கேள்விகள் அனைத்துக்கும் பழனிமாணிக்கம் உரிய விளக்கத்தையும், பதிலையும், வாக்குறுதிகளையும் வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம், பழனிமாணிக்கம் கூறுகையில், நாட்டின் வளர்ச்சியும், எதிர்கால இந்தியா மீதான அக்கறை மாணவர்களுக்கு அதிகம் உள்ளது. மாணவர்களும் அரசியலில் ஈடுபட இதுபோன்ற களங்கள் தான் ஊக்கமாக அமையும்” என்றார்.

;