tamilnadu

img

காவல்துறைக்கு நன்றி கூறிய பள்ளிக் குழந்தைகள்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உலக நன்றி தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி சிவாணி சிபிஎஸ்சி பள்ளி குழந்தைகள், பொதுமக்களை பாதுகாக்கும் காவலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சுமார் 62 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து காவல் துறைக்கு பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.  பள்ளி குழந்தைகளை காவல் உதவி ஆய்வாளர் ராமன் தலைமையில் அனைத்து காவல் துறையினரும் வரவேற்று சிறு குழந்தைகளுக்கு காவல்துறையின் மீது உள்ள பயத்தை போக்கி அனைத்து குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்து அனுப்பினர்.