tamilnadu

img

அரசுக் கல்லூரிகளில் சுழற்சி முறையை ரத்து செய்யக் கூடாது

மாணவர் சங்கம் கோரிக்கை 

தஞ்சாவூர், ஜூன் 5- அரசுக் கல்லூரிகளில் சுழற்சி (ஷிப்ட்) முறையை ரத்து செய்யக் கூடாது. தனியார் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் துவங்கி மூன்று மாதம் கடந்த பின்பே மாணவர்களிடம் கல்வி கட்டணங்களை நிர்வாகங்கள் பெற வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் இணைய சேவை கிடைக்கப் பெற்ற பின்பே ஆன்லைனில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாணவர் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் ஜி.வீரையன், துணைத் தலைவர் பிரபாகரன், நகரச் செயலாளர் அருண்குமார், சரபோஜி கல்லூரி கிளைத் தலைவர் சக்திவேல், அஜய், அர்ஜூன், மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.