tamilnadu

img

தஞ்சை இளைஞர்களின் பெரியகுளம் தூர்வாரும் பணிக்கு உதவ முன்வந்த மாவட்ட நிர்வாகம்

தஞ்சாவூர், ஜூலை 28- தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் 5,500 ஏக்கர் பாசனப்பகுதிக்கு பயன்பட்டுவந்த 564 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரியகுளம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும், கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரி பராமரிக்காததால் வரத்துவாரிகள் அடைபட்டு மண்மேடிட்டு கரைகள் பலவீனமான நிலை யில் இருந்தது.  இது குறித்து பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பியும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதி இளைஞர்கள், விவசாயிகள் ஒன்றிணைந்து பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்து கடந்த 33 நாட்களாக தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து அறிந்த கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு பாராட்டிய தோடு, தூர்வாரும் பணிக்காக நன்கொடை வழங்கினர். இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடி மராமத்துப் பணிகள் நடைபெறுவதை, ஆட்சியர் ஆ.அண்ணா துரை சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது பேராவூரணி பெரியகுளத்தை பார்வையிட்டு, தங்கள் சொந்த முயற்சியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகளை  பாராட்டி, தேவையான அனைத்து உதவிகளை யும் மாவட்ட நிர்வாகம் செய்யும் என்றார். பேராவூரணி பேரூ ராட்சி செயல் அலுவலர் மு.மணிமொழியன் தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.