தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனை யில், ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நடந்தது. மாவட்டத் தலைவர் விஜய் சரவணன் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் பாஸ்கர், காவல் உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். தொகுதி தலைவர் விக்னேஷ் வர வேற்றார். முகாமில் சேகரிக்கப்பட்ட ரத்தம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ரத்த தானம் வழங்கிய இளைஞர்களுக்கு மரக் கன்று வழங்கப்பட்டது. 18 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. முகாமில் ஒன்றிய தலைவர் ராகுல் விக்னேஷ், நகர தலைவர் விஜய் ரவி, தஞ்சை தொகுதி ஒருங்கிணைப்பாளர் வசந்த், தஞ்சை மாநகர தலைவர் ஆனந்த் கலந்து கொண்டனர். தொகுதி செயலாளர் மோகன் நன்றி கூறினார்.