tamilnadu

img

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நன்றி அறிவிப்பு கூட்டம்

தஞ்சாவூர், மே 28-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் திங்கள்கிழமை பேராவூரணியில் உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி கூறினார். நிகழ்ச்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் இடங்களில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத் தில் பேசினார்.