tamilnadu

img

புகையிலை விற்பனை: கடைகளில் ஆய்வு

தஞ்சாவூர் ஜூன்.10- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதி கடைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் தடை செய்த புகையிலை பொருட்கள், குட்கா, போதை மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறதா என வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தரராஜன் தலைமையில் திங்கள்கிழமை சுகாதார துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்தின், புண்ணியநாதன், பாலசந்திரன், ராம்குமார் கலந்து கொண்டனர். இதில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.