பலவீனமான நிலையில் காவிரி ஆற்று கரைகள் கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகும் அபாயம்
முசிறி, ஆக.13- முசிறி அடுத்த உமையாள் புரத்தில் காவிரியின் கரைகள் பல வீனம் அடைந்து காணப்படுவ தால் உடன் சீரமைக்க பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உமையாள்புரம் பகுதி யில் அமைந்துள்ள காவிரியாற் றின் கரைகள் பலம் இழந்து காணப்படுகிறது. மேலும் சிறித ளவு வந்த காவிரி நீருக்கே மண் அரிப்பு ஏற்பட்டு பனை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்துள்ளன. தற்போது கர்நாடகாவில் பெய்த பெரும் மழையின் கார ணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி அங்கிருந்து தண்ணீர் விடப்பட்டு மேட்டுர் அணை 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரியாற் றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டால் முசிறி அருகே உமை யாள்புரம் மற்றும் பல்வேறு கிராமப் பகுதியில் காவிரியின் கரைகள் உடைந்து நீர் கிரா மத்தில் புகும் நிலை உள்ளது. எனவே வருவாய் துறையினர் ஆற்று பாசன கோட்ட அலு வலகத்தை சேர்ந்தவர்கள் உமை யாள்புரம்பகுதியில் காவிரி கரை யை ஆய்வு செய்து பலப்படுத்த வேண்டும். மேலும் காவிரியாற் றின் அனைத்து பகுதிகளின் கரை களை மறு ஆய்வு செய்து பல வீனமாக உள்ள இடங்களில் கரை களை பலப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
மணல் அள்ளுவது குறித்து கோரிக்கை கனரக வாகனங்களுக்கு உடனே அனுமதி மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அலட்சியம்
கும்பகோணம், ஆக.13- கும்பகோணம், திருவிடைமரு தூர், பாபநாசம் தாலுகா மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ளுவதற்கு தனி குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம்சிஐடியு கோரிக்கை விடுத்து வந்தது. அதற்கு அனுமதி வழங்கா மல் லாரி மூலம் மணல் அள்ளு வதற்கு அனுமதி அளித்ததை கண்டித்து மாட்டு வண்டி தொழி லாளர்கள் சிஐடியு செயலாளர் ஜெய பால் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் கூறிய தாவது, கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் ஆகிய பகுதியில் ஏராளமான மாட்டு வண்டி தொழி லாளர்கள் வாழ்வாதாரத்திற்காக ஆற்றில் மணல் எடுப்பதற்கு அனு மதி வழங்கக் கோரி நீண்ட நாட்க ளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது சம்பந்தமாக கும்பகோணம் கோட்டாட்சியரை வரும் 22-ஆம் தேதி சந்தித்து முறை யீடு போராட்டம் நடத்த உள்ள நிலை யில் திடீரென பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே தேவன் ஓடை பகுதியில் லாரி மற்றும் டாரஸ் போன்ற கனரக வாகனங்களில் மணல் எடுத்துச் செல்வதற்கு குவாரி அமைக் கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. இதனை அறிந்து நீண்ட நாட்க ளாக கோரிக்கை வைத்து வரும் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்காமல் கனரக வாக னங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. மாட்டு வண்டி தொழிலா ளர்களுக்கு தனியாக மணல் குவாரி அமைத்திட வேண்டும் என கோரிக்கை வைத்து மறியலில் போராட்டம் நடைபெற்றது என்றார். இதைதொடர்ந்து மணல் குவா ரிக்கு அனுமதி அளித்த செயற்பொறி யாளர் கண்ணன், மாட்டு வண்டி தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். வரும் வெள்ளி அன்று அமைதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் எண்ணிக்கை கணக்கிட்டு மணல் குவாரிக்கு அனு மதி வழங்கப்படும் என உறுதி அளித்தார். போராட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க கும்பகோணம் தெற்குப் பகுதி தலைவர் முருகன், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் முருகன் வடக்குப் பகுதி பொறுப்பா ளர்கள் லட்சுமணன் செந்தில் விதொச மாநில குழு உறுப்பினர் சி. நாகராஜன் எவர்சில்வர் தொழி லாளர் சங்க தலைவர் ஏ.செல்வம் கைத்தறி சங்க பொறுப்பாளர் கேஆர்.சந்திரன் விவசாய தொழி லாளர் சங்க ஒன்றிய செயலாளர் நாகமுத்து மற்றும் ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.