திருச்சிராப்பள்ளி, ஜூலை 29- தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் ஒரு மாவட்டத்தின் மேலாளர் மற்றொரு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்வதை உட னடியாக நிறுத்த வேண்டும். மாதாந்திர கையூட்டு, இடமாறு தல், கடை மாறுதல்களில் சட்டத்திற்கு புறம்பாக நடை பெறும் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில பொரு ளாளர் சாகுல்ஹமீது, மாநில செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பேசினர். துணைத்தலைவர் பூபதி, இணை செய லாளர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.