தஞ்சாவூர் நவ.8- தஞ்சையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பொது மக்கள், பயணிகள் பயன்பெறும் வகையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அதே நேரத்தில் மாநக ராட்சிக்கு சொந்தமான இடம் இருந்தும், தனியார் இடத்துக்கு அருகில் தற்காலிக பேருந்து நிலையம் இடம் தேர்வு செய்து, தனியார் கொள்ளை லாபம் பார்க்க துணை போனது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பி.செந்தில் குமார் ஆகியோர் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் வியாழக்கிழமை மாலை, மாநகராட்சி ஆணையரை சந்தித்து பேசினர். அப்போது, “தஞ்சையில் தற்காலிகமாக அமைக்கப்பட் டுள்ள பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் பயணி கள் பயன்பெறும் வகையில் குடி நீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க் கால அடிப்படையில் செய்து தர வேண்டும். சொந்தமான இடம் இருந்தும், தற்காலிக பேருந்து நிலையத்தை, நகராட்சி தனக்கு வர வேண்டிய வருவாய்க்கு இழப்பு ஏற்படுத்திக் கொண்டு, பேருந்து நிலைய உட்புறத்தில் அருகில் உள்ள தனியார் கொள்ளை லாபம் அடிக்க வழி வகுத்துள்ளது.
பொதுமக்களுக்கு பாது காப்பாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் பேருந்து நிலையம் போல் பயன்படுத்தி வரு கின்றனர். இப்பகுதியில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உட னடியாக செய்து தர வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகளுக்காக அப்பு றப்படுத்தப்பட்ட சிறு கடைக ளுக்கு தற்காலிக பேருந்து நிலை யத்திற்கு கடை அமைத்து தர வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத் தில் கட்டிடம் கட்டுவதற்கு முனைப்பு காட்டும் அதிகாரிகள், நகர வளர்ச்சியில், தூய்மைப் பணியில் அக்கறை காட்ட வேண்டும் உள்ளிட்டவை ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கைகளை உடன டியாக நிறைவேற்றாவிட்டால் நவம்பர் 15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு, பொதுமக்க ளைத் திரட்டி கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெறும் எனவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மாநகரக் குழு உறுப்பினர்கள் எஸ்.மனோகரன், சி.ராஜன், எம்.கோஸ்கனி, ஹெச். அப்துல் நசீர், எஸ்.சாந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.