tamilnadu

img

பெரம்பலூரில் தமுஎகச அமைப்பு தினம்

பெரம்பலூர், ஜூலை 1- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க அமைப்பு தினம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை விளக்க கூட்டம் பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் சனிக் கிழமை மாலை நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் ரா.பிரபா கரன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் கவிஞர் ராமர் தலைமை வகித்தார். டாக்டர் சி.கருணாகரன், முனைவர் ம.செல்லபாண்டியன், கவி ஞர்கள் இரா.எட்வின், தேவன்பு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் நா.முத்துநிலவன் சிறப் புரை ஆற்றினார். அமைப்பும், செயல் பாடும் குறித்து மாவட்டச் செயலா ளர் ப.செல்வகுமார் விளக்கவுரை யாற்றினார். வை.தேனரசு, பாரதி ஆறுமுகம், சுரேஷ்குமார், சக்தி பாலன் ஆகியோர் கவிதை தொகுப்பு ரையாற்றினர். மாவட்டக்குழு நிர்வாகி க.குமணன் நன்றி கூறினார்.  கூட்டத்தில், தேசிய மொழிகளிலும் புதிய கல்வி கொள்கை வரைவினை மொழிப்பெயர்த்து மத்திய அரசே வெளியிட வேண்டும். புதிய கல்விக் கொள்கையை வாசித்து, விவாதிக்க 6 மாத கால அவகாசம் வழங்க வேண் டும். பெரம்பலூர் புத்தகத் திருவிழா வினை தமுஎகச, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து இதர சமூக இயக் கங்களை ஒருங்கிணைத்து நடத்துவது உள்பட பல்வேறு தீர்மாணங்கள் நிறை வேற்றப்பட்டன.