tamilnadu

img

துபாய், கேரள இசைப் பள்ளிகளுடன் தமிழ்ப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், ஜூன் 18- தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தில் பல நாடுகளிலிருந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு இசை, நடன வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் ஜூன் முதல் வாரத்தில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துபாய் அனந்தரா இசை மற்றும் நடனப் பள்ளி, கோழிக்கோடு நடனம் இசை மற்றும் நாட்டியப்பள்ளி, எர்ணாகுளம் நடனம் இசை மற்றும் நாட்டியப்பள்ளி, கோயம்புத்தூர் பாரத கலா மந்திர், தஞ்சாவூர்  வேலம்மாள் போதி வளாகம் ஆகிய வற்றோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.  இந்நிகழ்வில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன், பதிவாளர் ச.முத்துக்குமார், பண்பாட்டு மைய இயக்குநர்(பொ) செ.கற்பகம், கோழிக் கோடு நடன இசைப் பள்ளி ஸ்மிதாராஜ், உதவிப் பதி வாளர் ச.மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

;