tamilnadu

img

பணி ஓய்வுநாளில் சஸ்பெண்ட்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 4-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாநிலத்தலைவரும், ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான சுப்பிரமணியனை பணி ஓய்வு நாளில் சஸ் பெண்ட் செய்ததை கண்டித்தும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருச்சி மாவட்டஅரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ சார்பில் திங்கள்அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி அரசு ஊழியர் சங்கமாநிலச் செயலாளர் பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் கள் சங்க மாநில துணைத் தலைவர் பழனியப்பன், வணிகவரித் துறை அலுவலர்கள் சங்க மாநிலதலைவர் லட்சுமணன் பேசினர். சத்துணவு ஊழியர் சங்க ராஜேந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மருதுபாண்டியன், பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்படநூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜபருல்லா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி மற்றும் தோழமைச் சங்கநிர்வாகிகள் பால்.பிரான்சிஸ். ப.பாரதி, வி.ஏ.கே.மனேகரன், ஜெகன்நாதன், துரை.அரங்கசாமி, கே.குமரேசன், மலர்விழி, மா.குமரேசன், சந்திரபோஸ், மதலைமுத்து, கணேசன், ஜீவன்ராஜ், தேவமணி, ராஜா,உள்ளிட்டோர் பேசினர். கே.குமார் நன்றி கூறினார்.நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டனஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.அந்துவன்சேரல் தலைமை வகித்தார்.சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் விளக்கவுரையாற்றினார். தோழமைச் சங்க நிர்வாகிகள் எஸ்.ஜோதிமணி,  எல்.பிரேம்சந்திரன், வி.தேன்மொழி, எஸ்.மோகன், வி.கணேசன், என்.ஜீவானந்தம், சொ.கிருஷ்ணமூர்த்தி,  எஸ்.சித்ரா காந்தி, சரவணன், சீனி.மணிஆகியோர் கண்டன உரையாற்றினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநிலப் பொருளாளர் டி.நாகராஜன் நிறைவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பா.ராணி நன்றி கூறினார்.