tamilnadu

திருச்சிராப்பள்ளி முக்கிய செய்திகள்

கோடை விளையாட்டு பயிற்சி முகாம்


திருச்சிராப்பள்ளி, ஏப்,26-திருச்சி மாநகராட்சி மற்றும் தேசிய கல்லூரி சார்பில் கோடை விளையாட்டு பயிற்சி முகாம் வரும் மே 1ம் தேதி முதல் 25-ந் தேதி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மிட்டன், டேபிள்டென்னிஸ், தடகளம், யோகா, ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி அளிக்கப்படும்.பயிற்சியில் 6 முதல் 21வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பம் திருச்சி தேசிய கல்லூரி உடற்கல்வி துறையிலும், மாநகராட்சி அலுவலகத்திலும் ஏப்.27-ந்தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 99941-18478 என்ற எண்ணை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சோலார் மின் உற்பத்தி துவக்க விழா


திருச்சிராப்பள்ளி, ஏப்.26-திருச்சி விமான நிலையத்தில் 1 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி தொடக்க விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதை அகில இந்திய விமான நிலைய ஆணையத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை உறுப்பினர் அனுஸ்அகர்வால் தொடங்கி வைத்தார். விமான நிலைய இயக்குனர் குணசேகரன் துணை பொதுமேலாளர் பிரான்சிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கப்பட்டன. 

;