தரங்கம்பாடி, நவ.8- நாகை மாவட்டம், பொறையார் காய்கறி சந்தையில் உள்ள வெங்காய மண்டியில் வட்ட வழங்கல் அலுவலர் பிரான்சுவா திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதையொட்டி மண்டிகளில் வெங்காயம் பதுக்கப்படுகிறதா? விலை உயர்வை கார ணம் காட்டி நிர்ணய விலையை விட அதிக விலைக்கு மக்களிடம் விற்பனை செய்கின்றனரா? என வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வினை மேற்கொண்டனர்.