திருச்சிராப்பள்ளி, அக்.25- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி மாணவ மாணவி யர்களின் புத்தக திறனாய்வு, எனக்குப் பிடித்த நூல், நூல்க ளின் புத்தக கருத்துகளை எடுத்து ரைக்கும் நாடகம், அவர்களது சொந்த கற்பனை திறனில் அட் டைப் படம் வரைதல் மற்றும் உரு வாக்குதல் ஆகிய நிகழ்வுகள் மைய நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் புத்தகத்தை யும் புத்தகத்தின் கருத்துக்களை யும் நாடக வடிவில் நடித்து காட்டினர். புனித பிலோமினா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் தங்களது சொந்த கற்பனையில் புத்தகத் திற்கு அட்டைப் படம் வடிவமைத்த னர். மாவட்ட நூலக அலுவலர் சிவக் குமார் நிகழ்ச்சியின் நோக்கத் தைப் பற்றி எடுத்துரைத்தார்.