tamilnadu

img

கொள்ளிடத்தில் சாக்கடை நீர் கலப்பதை தடுக்க கோரி போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 2- ஸ்ரீரங்கம் பகுதி கழிவுநீர் திருவா னைக்காவல் சோதனை சாவடி அழகி புரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கலப்பதை  கண்டித்தும். சாக்கடை நீர் கொள்ளிடம் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் செவ்வாய் அன்று கொள்ளிடம் ஆற்றில் யாகம் வளர்த்து நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு முத்து, கணேசன் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாநகர் மாவட்ட தலைவர் சந்திர பிரகாஷ், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் கிச்சான், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, தலைவர் ஜெயக் குமார், பொருளாளர் சந்துரு, சுப்பிர மணியன், லோகநாதன், கண்ணா, லெட்சுமணன், நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவ லறிந்து வந்த போலீசார் போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத் திற்கு அனுமதி இல்லை எனவே உங் களை கைது செய்கிறோம் என்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக் கள் இப்பகுதி மக்களின் நலனுக்காக போராடும் இவர்களை கைது செய்யக் கூடாது அப்படி கைது செய்ய வேண் டும் என்றால் எங்களையும் கைது செய்யுங்கள் எனக்கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி ஆணை யர் ராமச்சந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள், மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட  இள நிலை பொறியாளர் பாலமுருகன் ஆகி யோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். பேச்சுவார்த்தையில் கொள்ளிடம் ஆற்றில் குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை ஒரு வாரத்திற்குள் அகற்றுவது. சாக்கடை நீரில் மிதக்கும் குப்பைகளை உடனே அகற்றி கொசு மருத்து அடிப்பது. 2 மாத காலத்தில் நிரந்தர தீர்வு காண்பது என முடி வானது. இதனை தொடர்ந்து அனை வரும் கலைந்து சென்றனர்.