tamilnadu

img

ஜன.8 வேலை நிறுத்த பிரச்சார வாயிற் கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.3- மின்சார சட்டத்திருத்த மசோதா 2018 திரும்பப் பெற வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு, ஐடிஐ படித்தவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் வெள்ளியன்று ஸ்ரீரங்கம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் வேலை நிறுத்த பிரச்சார வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். தொமுச மாநில தலைவர் மலையாண்டி, தொழிலாளர் ஐக்கிய சங்க சிவசெல்வம், தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க வட்ட செயலாளர் ராஜமாணிக்கம், தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் சங்க செயலாளர் இருதயராஜ் ஆகியோர் பேசினர்.  இதில் நெல்சன், சுப்ரமணி, ராஜூ, தர்மலிங்கம் உள்பட 5 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போன்று லால்குடி கோட்டம் முழுவதும் பிரச்சாரம் நடைபெற்றது. நிறைவாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வராசு நன்றி கூறினார்.

;