தஞ்சாவூர், பிப்.26- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி. குமரப்பா பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா தமிழ் நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலை வர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேராவூரணி கிளை முதன்மை மேலாளர் சூரியேந்திரன் கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளைத் துவக்கி வைத்தார். எல்.கே.ஜி முதல் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். 25, 50, 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டப்பந்த யங்கள், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப் பட்டன, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதங்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில், பள்ளி நிர்வாக இயக்குநர் எம்.நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் பொறியாளர் அஸ்வின் ஸ்ரீதர், ஜே.ஸி.கே சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் சிந்து, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷா பேகம், உடற்கல்வி ஆசிரியர்கள் முரளிதரன், ரமேஷ், ஆசிரியர்கள், கலந்துகொண்டனர். முன்னதாக ஆசிரியர் பவுன்ராஜ் வரவேற்றார். ஆசிரியர் ரமாதேவி நன்றி கூறி னார்.