tamilnadu

img

குடிநீர் முறையாக வழங்கக் கோரி கையெழுத்து இயக்கம்

திருச்சிராப்பள்ளி.செப்.14- திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி 20வது வார்டு நேருஜி நகரில் வாரத்திற்கு ஒரு முறை தான் காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் வழங்கும் ஆபரேட்டர் பாரபட்சம் பார்ப்பதால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் 20வது வார்டு பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்திற்கு மாவட்ட தலைவர் பாலு தலைமை வகித்தார். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பாண்டி கலந்து கொண்டனர்.