tamilnadu

img

விதைகள் கலை இலக்கிய கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 10- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விதைகள் கலை இலக்கிய சந்திப்பு கூட்டம் சங்க மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எழுத்தாளர் சீத்தா வெங்கடேஷ் எழுதிய கீர்த்தனாவின் மோதிரம் சிறுகதை தொகுப்பு நூலை பாராட்டி சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா பேசினார். சிறுகதை தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைகளையும் முன்வைத்து ஆசிரியர் பாமா, கவிஞர்கள் யோகேஸ்வரி, மணிகண்டன், மாறா, கவியரசன், விஜயேந்திரன், பூவிழி தென்றல் ஆகியோர் பேசினர். பின்னர் எழுத்தாளர் சீத்தாவெங்கடேஷ் ஏற்புரை வழங்கினார். முன்னதாக சங்க மாநகர செயலாளர் கவிஞர் வெங்கடேஷ் வரவேற்றார். கவிஞர் இளங்குமரன் நன்றி கூறினார்.