பள்ளியில் அறிவியல் கண்காட்சி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா சிபிஎஸ்இ பள்ளியில், லெவல்அப்-25 கல்வி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநிலப் பொருளாளர் முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர் தலைமை வகித்தார். நகர வர்த்தகர் கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சப்டில்போட்க் நிறுவனர் சிவசந்தோஷ், ஆட்டம் இன்பினிட்டி சொலுஷன் நிறுவனர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று குத்துவிளக்கேற்றி, கல்விக் கண்காட்சியை துவக்கி வைத்துப் பேசினர். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவியர் காட்சிப்படுத்தி இருந்த அறிவியல் படைப்புகள், காண்போரை கவரும் வகையில், முற்றிலும் வேறுபட்டு இருந்தது. மேலும், நேரடி செய்முறை பயிற்சி, சுய கற்பனை வளம், உருவாக்கும் திறன், வரைபட மாதிரிகள் மூலம் விளக்குதல் என மாணவர்களின் பல நாள் உழைப்பின் பயன் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இதில், பள்ளி நிர்வாக இயக்குநர் எம். நாகூர்பிச்சை, பள்ளி அறங்காவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் சுபா வரவேற்றார். ஆசிரியர் சாருமதி நன்றி கூறினார்.