திருச்சிராப்பள்ளி, மார்ச் 1- திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நடை பெற்றது. விழாவினை கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுத்தீன் துவக்கி வைத்தார். பல்வேறு பள்ளிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விழாவில் பங்கேற்றனர். வினாடி-வினா போட்டி, சமூக விழிப்புணர்வு ஆவணப் படம், மாணவர்களின் அறிவியல் திறனை வெளிக் கொணரும் தொழில்நுட்ப மாதிரி களின் கண்காட்சிகள் ஆகியன நடை பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ், பரிசு வழங்கப் பட்டது. விழா ஏற்பாடுகளை அறிவியல் புல முதன்மையர் முனைவர் கௌஸ் பாஷா, உயிரியல், வேதியல், தாவரவியல் மற்றும் கணிதவியல் துறை பேராசிரியர்கள் செய்தி ருந்தனர். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் முகைதீன், துணை முதல்வர், கல்லூரியின் இணைச் செயலர் மற்றும் இயக்குனர்கள் பங்கு பெற்று மாணவ- மாணவிகளை வாழ்த்தினர். மேலும் மாவட்டத்தில் தமிழ்நாடு அறி வியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதழ் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேசிய அறி வியல் தின விழா நடைபெற்றது. தென்னூர் நடுநிலைப்பள்ளி, புத்தூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பாலக்கரை ஹோலிரெடி மெர்ஸ் பள்ளி, எஸ்.பீ.ஐ.ஓ.ஏ மெட்ரிக் பள்ளி, பீமநகர் மாநகராட்சி பள்ளி, சையது முர்துஷா அரசுப் பள்ளி, சுப்பையா நினைவு பள்ளி, சரோஜா கஸ்தூரி ரெங்கன் பள்ளி, புனித அன்னாள் பள்ளி, பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்பட 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் செயல்பாடுகள், வினாடி-வினா போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதில் பல்வேறு பள்ளிகளிலி ருந்து 4000க்கும் மேற்பட்ட மாணவ, மாண வியர் சர்.சி.வி ராமன் மற்றும் டார்வின் முகமூடி அணிந்து பங்கேற்றனர். போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யருக்குச் பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல், மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் அசோக், துணைத் தலை வர்கள் சீத்தா, கோகுல், மாணிக்கத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுகனி, நடராசன், பொதுக்குழு உறுப்பினர் திருமுரு கன், பொருளாளர் மகேஸ்வரன், அறிவி யல் இயக்க உறுப்பினர் கவிஞர் இளங்கும ரன், ஆசிரியர்கள் செல்லப்பிரியா, தேவிகா, மேகலா, நிர்மலா, புவனேஸ்வரி, சந்திரா, மைக்கல் ராயர், சுதா, பெருமாள், வேலுச் சாமி, சாந்தி உள்பட தலையாசிரியர்கள் நிசானி, ரோஸ்லின் ஆகியோர் செய்தி ருந்தனர்.