tamilnadu

img

ரயில் நிலைய தூய்மை பணியில் பள்ளி சாரணர்

கரூர், ஜூன் 19- கரூர் மாவட்டம் பரணி பார்க் சாரணர் மாவட்டத்தைச் சேர்ந்த 30  மாணவர்கள், அண்மையில் தென்னக ரயில்வே யின் சேலம் கோட்டம் சார்பில் கரூர் ரயில் நிலையத்தில் நடந்த ஸ்வெச் பாரத் முகாமில் கலந்து கொண்டனர். முகா மில் ரயில்வே உதவி கோட்ட நல அதிகாரி வி.குமார், கரூர் ரயில் நிலைய மேலாளர் ஸி.ராஜராஜன் உரையாற்றி னர். பரணி பார்க் சாரணர், கரூர் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்த உதவியதோடு, தூய்மை குறித்து துண்டுப் பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். பரணி பார்க் சாரணர் மாவட்ட ஆணை யர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், துணை ஆணையர் ஷி.சுதாதேவி, செயலர் ஸி.பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.