tamilnadu

img

பெல் கூட்டுறவு வங்கியில் ரூ.1.40 கோடி கொள்ளை

திருச்சி பெல் நிறுவனத்தின் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ரூ.1.40கோடி கொள்ளையடிக்கப்படுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி  உள்ளது. 
திருச்சி திருவெறும்பூரில் பெல் நிறுவன ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ரூ.1.40 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  திருச்சி மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பதற்குப் பதிலாக அங்குள்ள மேஜையின் மீது அந்தப் பணம் வைக்கப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
அதில் முகமுடி மற்றும் கையுறை அணிந்த அடையாளம் தெரியாத நபர்  மேஜையின் மீதிருந்த அந்தப் பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்த ஊழியர்கள் 10 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.