tamilnadu

img

கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சாலைப் பணியாளர்கள் போராட்டம்

பெரம்பலூர், ஜூலை 4- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பெரம்பலூர் துறைமங்க லத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலு வலகம் முன்பு காது, கண், வாயை கருப்புத் துணியால் கட்டுக் கொண்டு நூதன முறையில் போராட் டம் நடத்தினர். அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப் பினர் கே.மணிவேல், மாவட்ட இணைச் செயலர் பி.முத்து ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ் நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் கி.ஆளவந்தார், கூட்டு றவுத்துறை பா.சிவக்குமார் கோரிக் கைகளை விளக்கி பேசினர்.  போராட்டத்தில், சாலைப் பணி யாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். முதன்மை இயக்குநர் பொறுப் பில் பொறியாளரை நியமனம் செய் யாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரியை முதன்மை இயக்குநராக நியமிக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை யில் நியாயமான கோரிக்கைகளுக் காக போராடும் சாலைப் பணி யாளர் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதற்கு பதிலாக, போராட்டத்தை ஒடுக்கும் வகை யில் அசாதாரண நிலையை உரு வாக்கி வரும் முதன்மை இயக்குநர் மற்றும் தலைமை பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.  முன்னதாக, மாவட்டச் செயலர் சி.சுப்ரமணியன் வரவேற்றார். பொறுப்பாளர் என்.பெரியசாமி நன்றி கூறினார்.