tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு

தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சை ஆட்சியர் அலுவல கத்தில் வெள்ளிக்கிழமை  விவசாயி கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த ஏராளமான விவ சாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.  கூட்டத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமும், தேசிய வங்கிகள் மூலமும் விவசாயி கள் கடன் அட்டைகள் பெற்று அதன் மூலம் ரூ1.50 லட்சம் வரை எந்த வித அடமானமும் இல்லாமல் கடன் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப் பித்த 15 நாளுக்குள் இந்த கடன் அட்டை விவசாயிகளுக்கு கிடைத்து விடும் என தெரிவிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் அளித்த மனுவில், கல்லணைக் கால்வாய் கடைமடைப் பகுதிகளான பேரா வூரணி, பட்டுக்கோட்டை, சேது பாவாசத்திரம், மதுக்கூர் பகுதி களில் இதுவரை முறையாக தூர் வாரப்படாததால், தண்ணீர் சென்று சேருவதில் பிரச்சனை உள்ளது. இத னால் கடந்த ஆண்டு காவிரியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சென்று சேராமல் விவசாயம் நடைபெற வில்லை.  எனவே காவிரி கிளை வாய்க் கால்களை கடைமடைப் பகுதி வரை முறையாக தூர்வார வேண்டும். அதே போல் கும்பகோணம் மன்னி யாற்றிலும் தூர்வாரும் பணி தொடங்கி முழுமை பெறாமல் உள்ளது. அதனை முழுமையாக தூர்வார வேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என அதில்  கூறப்பட்டிருந்தது. 

மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் மாவட்ட செய லாளர் சுவாமிநாதன் அளித்த மனு வில், மத்திய அரசின் விவசாயிகள் ஊக்குவிப்புத் திட்டம் குத்தகை சாகுபடி தாரர்களுக்கும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். ஜமா பந்தியில் விவசாயிகளால், பொது மக்களால் அளிக்கப்பட்ட மனுக் களுக்கு பெரும்பாலும் தீர்க்கப்படா மல் உள்ளன. விரைவில் தீர்வு ஏற் படாவிட்டால் அந்தந்த பகுதி வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடை பெறும்.  கடந்த 15 ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட வில்லை. தேவராயன் பேட்டை,  சுவாமிமலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நடை பெற்ற சுமார் ரூ73 லட்சம் முறை கேடுகளுக்கு கூட்டுறவு வங்கியின் கள அலுவலர்களும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது துறை வாரியான நடவடிக்கைக்கு உத்தர விட்டு தவறு செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என மனு வில் கூறப்பட்டுள்ளது.  தொடர்ந்து விவசாயிகளுக்கு தேர்தல்கால வாக்குறுதி அளித்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூடேஷ் பகேல், அம்மாநில விவசாயிகளின் நலன் கருதி நெல் குவிண்டால் ஒன்றிற்கு ரூ750 ஊக்கத் தொகை அளித்து நெல் கொள்முதலில் மூன்று மாதங்களில் எந்த ஆண்டி லும் இல்லாத வகையில் 80.4 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாறு படைத்திருக்கி றார். சத்தீஸ்கர் மாநில முதல்வ ருக்கு நன்றி தெரிவித்து ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க துணைத் தலை வர் வெ.ஜீவகுமார் அளித்த மனு வில், காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஷேல் கேஸ், ஓ.என்.ஜி.சி, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் வராமல் தடுக்க நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலேயே காவிரி டெல்டா மாவட்டத்தை பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும்.  குடிமராமத்து பணிகள் ஊழல் நடைபெறாமல் தடுக்க கண் காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். வெளிப்படையான நிர்வாகத்துக்கு விவசாய சங்க பிரதி நிதிகளை குழுக்களில் சேர்க்க வேண்டும். சாகுபடி கடன் எந்தவித நிபந்தனையுமின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். மும்முனை மின் சாரம் தொடர்ந்து கிடைக்க வில்லை. 12 மணி நேரமாவது தட்டுப் பாடின்றி மின்சாரம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்காலில் சென்ற ஆண்டு குடிமராமத்து நிதி யில் தூர்வாரிய போது பாதியில் நிறுத்தப்பட்ட பணிகளை கடந்த ஆண்டு நிதியிலேயே வேலையை முடிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட தமிழக விவசாய சங்க மாநில துணைத் தலைவர் சுகுமாறன் அளித்த மனுவில், அனைத்து விவ சாயிகளை காப்பாற்ற அனைத்து விவசாய கடன்களை கூட்டுறவு வங்கி கடன், தேசிய வங்கி கடன், அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.  கஜா புயலால் பாதிக் கப்பட்ட நெல், கரும்பு, வாழை, தென்னை பயிர்களுக்கு இழப்பீ டும் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு பயிர் காப்பீடு உடனே வழங்க வேண்டும். டெல்டா மாவட் டத்தில் உள்ள பாசனம் உள்ள வாய்க்கால்கள் ஆறுகள் ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வாய்க்கால் களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோமா நிலையில் மருத்து வமனையில் இருப்பது போல தலை யில் கட்டு போட்டபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவ சாய நிலங்களில்  மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழக அமைச்சர் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கவில்லை. மீறி எடுத்தால் அவர்கள் மீது கிரி மினல் வழக்கு பதிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.  இந்நிலையில் மத்திய அரசு புதிதாக ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டிப் பதாகக் கூறி அனைத்து விவ சாய சங்க நிர்வாகிகளும், விவசாயி களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் தலைமையில், கூட் டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.