தஞ்சாவூர், ஜூலை 11- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியில் புதிய பேருந்து நிலையம் அருகில் நீலகண்டபுரம் செல்லும் ரயில்வே கேட் எல்சி எண்- 121. இந்த ரயில்வே கேட் நூற்றாண்டு கால மாகப் புழக்கத்தில் இருந்த நிலை யில் நடைபெற்று முடிந்த காரைக் குடி- திருவாரூர் அகல ரயில் பாதை சீரமைப்பின் போது நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே துறை முடிவு செய்தது. இதை எதிர்த்து இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவ் வழியாக செல்லக்கூடிய கிராமங்க ளான கழனிவாசல், கொரட்டூர், சோழ கனார்வயல் என 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட் டங்கள் நடத்தி, ரயில்வே உப யோகிப்பாளர்கள் கூட்டமைப்பு சங்கம் ஏற்படுத்தி அவர்கள் மூலம் மத்திய, மாநில அமைச்சர்கள் ரயில்வே துறை அதிகாரிகள், பலரை சந்தித்து ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்த ராசு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், ஆகியோரை சந் தித்து பேசினர்.
மேலும் ரயில்வே கேட்டை மூடா மல் இருக்க பல்வேறு போராட் டங்கள் நடத்தி இறுதிக்கட்டமாக திமுக எம்பி திருச்சி சிவாவைச் சந்தித்து ரயில்வே உயர் அதிகாரி களிடம் கலந்து ஆலோசித்து இதற்கு மாற்று வழியான ரயில்வே கீழ்பாலம் அமைக்க வழிவகை செய்து ரயில்வே உயர் அதிகாரி களும் அதற்கு ஒப்புதல் தெரிவித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலை தொடங்கப்பட்டது. அப்போது டெமோ ரயில் வாரத்திற்கு திங்கள் வியாழன் ஆகிய இரு தினங்கள் இயக்கப் பட்ட நிலையில், இந்த ரயில்வே கேட் பாலம் அமைக்கும் பணியினை வியாழக்கிழமை வேலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் வேலையை முடித்து ரயில் பாதை யை சீரமைத்து மேம்பாலம் அமைக்கப்பட்டு மூன்று தினங்க ளில் ரயில் இயக்கப்பட்டது மேம் பாலம் அமைக்கப்பட்ட நிலையில் அதனை உபயோகப்படுத்துகிற 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் செல் லக்கூடிய கீழ் செல்லும் பாதை அமைக்க ஒரு வருடமாகியும், இன் னும் பாதி வேலை முடியாத நிலை யில் உள்ளது.
இதனால் பொதுமக்கள் இருசக் கர வாகனத்தில் செல்லக்கூட முடி யாத நிலையிலும், அவசர நிலை யில் செல்லக்கூடிய வாகனங்க ளான ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனங்கள் உள்ளேயே செல்ல முடியாத நிலையில் இப்பகு திக்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றி வரும் நிலை உள்ளது ஆனால் இன்று வரை வேலை முழுமையடையாமல் உள்ளதால் இப்பகுதியில் வசிக்கும் 500 குடும்பங்கள் மற்றும் பொது மக்கள், இவ்வழியாக செல்லக் கூடிய குடியிருப்பு வாசிகள் மாணவ, மாணவியர்கள், விவசாயி கள், மற்றும் இந்த ரயில்வே பாலம் அருகே இருக்கும் மருத்துவ மனைக்கு செல்லக்கூடிய நோயா ளிகள் இவ்வழியாக செல்லக்கூடிய 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெகு தூரம் சுற்றி வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோயில் சித்திரை திரு விழா நடைபெறுவது வழக்கம், அதே போல் இந்த ஆண்டும் சித் திரை திருவிழா நடைபெற்றது அப்போது தேர் சுற்றி வரும் பாதை யின் அருகே கீழ் பாலம் கீழ்பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் அவசர கதியில் இருபுறமும் பக்கவாட்டு சுவர் எழுப்பப்பட்டு பாதி அளவே கட்டிமுடிக்கப்பட்டுள்ளது கிடப்பில் போடப்பட்டு வேலைகள் நடை பெற்று வருவதால் இப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
மீண்டும் மழை காலம் தொடங்க உள்ள நிலையில் மிக விரைவில் வேலையை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து இப்பகுதி அப்பகுதி மக்கள் வழக்கறிஞர் மோகன் கூறுகை யில், வேலை தொடங்கி ஒரு வரு டத்திற்கு மேலாகிவிட்டது. மூன்று, நான்கு மாதங்கள் கிடப்பில் போடப்பட்டு வேலைகள் நடை பெற்று வருகின்றன. இதனால் பல கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பாலத்தின் ஒரு குறிப்பிட்ட வேலை நடைபெற்று அதற்கான பணம் பெற்ற பிறகே மறு வேலையை தொடங்குகின்றனர். முறையாக டெண்டர் அறிவித்து வேலை நடைபெறுவதாக தெரிய வில்லை. குறிப்பிட்ட வேலை செய்துவிட்டு அதற்கு பில் தொகை யை பெற்றுக் கொண்ட பிறகு மறு வேலையை தொடங்குகின்றனர் இதனால் வேலை முடிய இன்னும் 6 மாதம் ஆகும் என தெரிகிறது. எனவே ரயில்வே உயர் அதிகாரிகள் இந்த ரயில்வே கீழ்பாலம் அதன் செல்லும் வழியை சீரமைத்து விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் விரைவில் கொண்டு வர வேண்டும்” என தெரி வித்தனர்.