tamilnadu

img

மாணவர்கள் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தஞ்சாவூர், மே 15- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் அருகே உள்ள மணக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர்களுக்கு ஆசிரியர்களால் நிவாரணமாக அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதனை, மாணவர்களின் பெற்றோர்க ளுக்கு, பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பிரகாஷ் வழங்கினார்.  பெற்றோர்கள் தனிநபர் இடை வெளி கடைபிடித்து பொருட்களை வாங்கிச் சென்றனர். முன்னதாக தலைமை ஆசிரியர் திருமுடிச்செல் வன் வரவேற்றார். பள்ளித்துணை ஆய்வாளர் மாதவன், பெற்றோர் ஆசி ரியர் கழகத் தலைவர் ஞான சம்பந்தம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர் நீலகண்டன், ஆசிரியர்கள் முருகேசன், தேவதாஸ் கலந்து கொண்டனர். இதே போல் பெருமகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பூலான்கொல்லை கிரா மத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் குடும்பங்களுக்கு உணவுப் பொ ருட்கள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி, ஆசிரியர்கள் சிற்றரசன், ஜெய்சங்கர், காமாட்சி, கலைச்செல்வி, பள்ளி காவலர் சண்முகம் கலந்து கொண்டனர்.