tamilnadu

img

மின் விநியோகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 18- புதுச்சேரி உள்ளிட்ட 9 யூனியன் பிரதேசங்களில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், மாநில மின் வாரியங்களை பிரிக்கக் கூடாது, 2020 மின்சார சட்டத்திருத்த  மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தொமுச மாநில துணைத்தலைவர் மலையாண்டி, தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க ராஜமாணிக்கம், தொழிலாளர் சம்மேளன சிவசெல்வன், கணேசன், இன்ஜினியர் சங்கம் மற்றும் பொறியாளர் கழக திருச்சி மாவட்ட செயலாளர் விக்ரமன் ஆகியோர் பேசினர். அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக நகரியம் கோட்ட செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

கரூர்
மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் சட்டத்தை எதிர்த்தும் அனைத்து சங்க மின்வாரிய கூட்டுக்குழு சார்பாக கரூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்தியமைப்பின் மாவட்ட தலைவர் தனபால் தலைமை வகித்தார். பல்வேறு சங்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.