tamilnadu

img

மத்திய- மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து பிரச்சார இயக்கம்

திருத்துறைப்பூண்டி, நவ.18-   சிஐடியு திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் பிரச்சார பேரியக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.செல்வம் தலைமை வகித்தார்.  மத்திய- மாநில அரசுகளின் மக்கள் விரோத மற்றும் விவ சாயத் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தமிழ் நாடு முழுவதும் பிரச்சாரம் நடை பெறுகிறது. இப்பிரச்சாரத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், மாவட்டத் தலைவர் இரா.மாலதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பி. ஜோதிபாசு, சிஐடியு நகர பொ றுப்பாளர் எஸ்.சாமிநாதன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.என். லெனின், யு.ராமச்சந்திரன், ஏ.நபி, சங்க சட்ட ஆலோசகர் வி.வி. செந்தில்குமார், ரமேஷ், கே. ராஜேந்திரன், ஜி.வீரபாண்டியன், வி.சிவபாலன், பவுன்ராஜ், தம யந்தி, முரளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.  இந்த பிரச்சாரம், புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி அண்ணா சிலை, பழைய பேரு ந்து நிலையம் வழியாக வேதை சாலையில் நிறைவு பெற்றது.