திருச்சிராப்பள்ளி, டிச.2- திருச்சி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் காவேரி மகளிர் கல்லூரி இணைந்து கிழக்கு மண்டல அள விலான துளிர் ஜந்தர் அறிவி யல் வினாடி வினா நிகழ்ச்சி சனிக்கிழமை காவேரி மகளிர் கல்லூரியில் நடை பெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஜெய சந்திரன், நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் ஆரிப், தஞ்சாவூர் மாவட்டச் செய லாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் முகமது இதுரீஸ் வர வேற்புரை ஆற்றினார். மாநி லச் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் துவக்கவுரை ஆற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் ராம லட்சுமி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழ ங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உமர் நன்றி யுரை நிகழ்த்தினார். போட்டிகளை காவேரி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சாத்தம்மைப் பிரியா, இயற்பியல் துறைப் பேராசிரியர் முனைவர் மீனாட்சி, நுண்ணுயிரியியல் துறைப் பேராசிரியர் ஜெய பாரதி, இயற்பியல் துறைப் பேராசிரியர் காயத்ரி, கணினி பயன்பாட்டியல் துறைப் பேராசிரியர் இன்பைன் சிந்துஜா, நுண்ணுயிரியியல் துறைப் பேராசிரியர் ஜீனத்து நிசா, ஆங்கிலத் துறைப் பேரா சிரியர் ஸ்ரீஅருணா ஒருங்கி ணைத்து போட்டிகளை நடத்தினர். நிறைவு விழா நிகழ்ச்சி க்கு மாவட்டத் தலைவர் அசோக் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நடராசன், திருவாரூர் மாவட்டச் செயலாளர் பொன்முடி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செய லாளர் மணிகண்டன் வர வேற்புரை ஆற்றினார். காவேரி கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவர் நீல கண்டன், திருச்சி மாநகர வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெச்சுமி, மாநில துணைத் தலைவர் முனைவர் சுகுமாரன் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கி வாழ்த்து ரை வழங்கினர். நிறைவாக மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன் நிறைவுரை ஆற்றி னார். திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவா ரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இருந்து இளநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளிலிருந்து 48 பள்ளி களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்களும், 52 ஆசிரியர்களும், 20க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், 30க்கும் மேற்பட்ட காவேரி கல்லூரி நுண்ணுயிரியியல் துறை மாணவிகளும், 10 பேராசிரியர்களும், 10 கல்லூரி மாணவர்கள் கிளை நண்பர்கள் கலந்து கொண்ட னர். நிறைவாக கிளைச் செய லாளர் முகமது யாசர் நன்றி கூறினார்.