அறந்தாங்கி, ஜூலை 4- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மூக்குடி கீழ கொல்லை குடியிருப்பு மூக் குடி கூத்தாடிவயல் இணைப்பு சாலையில் நடுரோட்டில் மின் கம்பம் உள்ளது. அவ்வழியாக செல்லும் பள்ளி வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் அமைந்திருக்கும் மின் கம்பத்தை அகற்றி சாலை ஓரம் நட வேண்டும் என்று அப்பகுதி மக்களும் தன்னார்வ லர்களும் பல முறை சம்பந்தபட்ட மின்வாரிய நிர்வாகத் திற்கு புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கையும் இல்லை. எனவே அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கும் முன் மின் கம்பத்தை சாலை ஒரம் அமைக்க சம்பந்தப் பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.