tamilnadu

img

திருச்சியில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

திருச்சிராப்பள்ளி, மே 7-திருச்சி மாவட்டம் மணப் பாறை வட்டம் சமுத்திரம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியஜனநாயக வாலிபர் சங்கம்சார்பில் செவ்வாய் அன்றுசமுத்திரம் பகுதியில் பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு டிஒய்எப்ஐ வட்ட துணை செயலாளர் மாசிலாமணி தலைமை வகித்தார். வாலிபர் சங்க புறநகர் மாவட்ட தலைவர் பாலு,சிபிஎம் வட்ட குழு உறுப்பினர்கள் ஆ.சரவணன், ஆ.கண்ணன், மு.கருப்பையா, டிஒய்எப்ஐ வட்ட தலைவர் ஆ.வா.இளையராஜா உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

;