tamilnadu

பொன்னமராவதி விவகாரம் மேலும் ஒருவர் கைது

புதுக்கோட்டை, ஏப்.27-தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாகவும், ஒரு சமூகத்தைப் பற்றி அவதூறாகவும் இருவர் பேசிக் கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆடியோவில் இடம் பெற்ற இருவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஏப்.19-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஒரு சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில், அவதூறு ஆடியோவை பதிவிட்டதாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிசல்காடு கிராமத்தைச் சேர்ந்த க.செல்வக்குமார்(34) சிங்கப்பூரில் இருந்து சென்னை விமானம் நிலையத்துக்கு வந்து ஊருக்கு வந்து கொண்டிருந்த போது போலீஸார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடுந்தையாக இருந்ததாக பட்டுக்கோட்டை அருகே பள்ளிகொண்டான் பகுதியைச் சேர்ந்த எஸ்.வசந்த்(30) கைது செய்தனர். இந்நிலையில் செல்வக்குமார் அளித்த வாக்குமூலத்தின்படி சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய புதுக்கோட்டை அருகே நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த மு.சத்தியராஜை(30) கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர், அவதூறு ஆடியோவில் இடம் பெற்றுள்ள இருவரில் ஒருவர் என தெரியவந்துள்ளது.

;