tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள புதிய தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கை குறித்த தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம், திருச்சி ஜோசப் கல்லூரியில் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் உரையாற்றினர். புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் இந்தியக் கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கும் மிகப்பெரும் ஆபத்து கொண்டது என்பது உள்ளிட்ட கருத்துக்களை சீத்தாராம் யெச்சூரி கூறினார். இந்நிகழ்வில் குழந்தைகள் உரிமை ஆணைய தேசிய ஆலோசகர் ராமசாமி, அருட்தந்தை டாக்டர் ஜி.புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.