முசிறி, ஜூலை.25- முசிறி கைகாட்டியில் திருச்சி புறநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் முசிறி கிளைத்தலைவர் அழகேசன் தலைமை வகி த்தார். ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வா கிகள் சிவராஜ், ராஜா, சம்பத், கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் பேசினர். அப்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும், இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தினர். அப்போது கோரிக்கைகள் குறித்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கோ ஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மணி கண்டன், மோகன், நவமணி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார்.