முள்ளிவாய்க்கால் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவுநாள்
வைகோ பங்கேற்பு
தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஞாயிற்றுக் கிழமை மாலை முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10-ம் ஆண்டு நினைவு நாள் மாநாட்டில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ் இன அழிப்பை மிகக் கொடூரமாக செய்த சிங்கள அரசுக்கு அறைகூவல் விடுக்கும் விதமாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இலங்கையில் நிகழ்ந்த படுகொலைச் சம்ப வங்களை இங்கு சித்திரமாக வடிக்கப்பட்டுள்ளன. இங்கு அழி யாத உயிர், உணர்ச்சியூட்டும் காவியமாக அமைத்திருக்கி றார்கள். ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தமும், உயிர்களும் வீண் போகாது. இந்த இனப் படுகொலைக்கு காரணமான சிங்கள அரசை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் குற்றவாளியாக நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களத்தில் இன்னமும் சிறையில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஈழத் தமிழர் பகுதியில் உள்ள சிங்கள ராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தமிழர்களின் குடியிருப்புகளில் சிங்களர்கள் இருக்கி றார்கள், அவர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். தமிழர்களின் நிலங்களை அபகரித்த சிங்கள அரசு அதனை உடனடியாக திருப்பி வழங்க வேண்டும், இதற்கெல்லாம் ஒரே தீர்வாக இலங்கையில் பொது வாக்கெ டுப்பு நடத்தி மீண்டும் தமிழர்களுடைய உரிமைகள் வழங்கப் பட வேண்டும். அதைத்தான் இந்த பத்தாம் ஆண்டு நினைவு நாளில் நாம் உறுதியாக ஏற்கிறோம்’. இவ்வாறு வைகோ கூறினார்.
புதுமை ஆசிரியர் விருது
புதுக்கோட்டை, ஜூலை 8- கற்பித்தலில் முதலீடு இல்லாமல் புதுமையான முயற்சி களை ஆசிரியர்களிடம் ஊக்குவிக்க மாநிலம் முழுவதும் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு சமகர சிகஷா அபியான், ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி ஆகியவை இணைந்து கடந்த ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கு பெற்று புத்தாக்கங்களை சமர்ப்பித்த ஆசிரியர்களுள், தேசிய அளவில் கவுரவிக்கப்பட்ட 23 ஆசிரி யர்கள் மற்றும் சிறந்த முயற்சிகளை மேற்கொண்ட 500 ஆசிரியர்களையும் சேர்த்து மொத்தம் 523 ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் சென்னையில் ஜூலை 10-ம் தேதி நடைபெற உள்ள விழாவில் புதுமை ஆசிரியர் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த விருதுக்கு கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.ரவி, கம்மங்காடு அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை சி.மைதிலி, சித்தக்கூர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் எ.செல்வராஜ், உருவம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் முனியசாமி, செட்டிக்காடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சி.ரீனா ரோசி லின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.